search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி தீக்குளிப்பு"

    குடும்ப தகராறில் தீக்குளித்த மனைவியை காப்பாற்ற முயன்று உடல்கருகி சிகிச்சை பெற்ற கேபிள் ஆபரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேன்கனிக்கோட்டை:

    தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 32). இவரது முதல் மனைவி சரண்யா. இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி குழந்தை இல்லை.

    பழனிசாமி நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் கேபிள் ஆப்ரேட்டராக தங்கி வேலை பார்த்து வந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த அப்துல்தலாம் மகள் பானு (22) என்ற பெண்ணுடன் பழனிசாமிக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர்.

    பின்னர் திருமணம் செய்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி பகுதியில் குலாம்பாஷா என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கி குடியிருந்து வந்துள்ளனர். பானு தேன்கனிக்கோட்டை தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். பழனிசாமி கார்மெண்ட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கணவன்-மனைவி இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது அவர்களிடையே குடும்பதகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பானு வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற பழனிசாமியும் உடல் கருகினார்.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் 2 பேரையும் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை அன்று பானு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பழனிசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரும் நேற்று இரவு 8 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி தீக்குளித்ததால் அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயமடைந்தார்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கடம்பூரை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 35), விவசாயி. இவரது மனைவி காசியம்மாள் (28). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு காசிதுரை (2) என்ற மகன் உள்ளார். 

    இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த காசியம்மாள்  வீட்டிலிருந்த மண்எண்ணையை  உடலில் ஊற்றி  தீவைத்துக் கொண்டார். உடலில் தீபற்றியதால் அலறிய மனைவியை  ஓடிச்சென்று செல்லத்துரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். 

    அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்தினர் இருவரையும் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×